×

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்: கண்டுகொள்ளாத குடும்பத்தினர்; இளம்பெண் தற்கொலை!?

மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி : மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சந்தியா. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே சந்தியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா, கணவர் மற்றும்
 

மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி : மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர்  கண்ணன். இவரது மனைவி சந்தியா.  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம்  நடந்துள்ளது.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே சந்தியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா, கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மாமனாரை அனுசரித்து போகும்படி கூறியதாகக் கூறப்படுகிறது. 

இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த சந்தியா,  இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், நாகரசம்பட்டி காவல் நிலையத்திலும் மாமனார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த சந்தியாவை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை ஊர் பஞ்சாயத்தில் சந்தியா கூற அவர்கள் முருகனை கண்டிக்கவில்லையாம். இதைத் தொடர்ந்து தனது அம்மா வீட்டிற்குச் சென்ற சந்தியா, மாமனார் முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்  கூறியதோடு, வீட்டிலிருந்த சாணி பவுரை குடித்துள்ளார்.

இதையடுத்து சந்தியாவை  உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால்  சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சந்தியாவின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தியாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில்தான் சந்தியா தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மையான காரணம்  என்ன? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறாரா? என்பது தெரியவரும். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.