×

மருமகன்களுடன் கள்ளதொடர்பு: ‘கணவர் தற்கொலை, உறவினர் படுகொலை’ ; அதிர வைக்கும் சம்பவம்!

மருமகன்களுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் ஒருவர் தன்னை கண்டித்த உறவினர் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் : மருமகன்களுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் ஒருவர் தன்னை கண்டித்த உறவினர் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் தனது மருமகன்களுடன் மாமியார் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவருக்கு தெரிய வந்ததால் அவர் அந்த
 

மருமகன்களுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் ஒருவர் தன்னை கண்டித்த உறவினர் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குண்டூர் :  மருமகன்களுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் ஒருவர் தன்னை கண்டித்த உறவினர் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச்  சேர்ந்த தம்பதி தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் தனது மருமகன்களுடன் மாமியார் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவருக்கு தெரிய வந்ததால் அவர் அந்த பெண்ணை கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து மருமகன்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் நடவடிக்கை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் உறவினர்களில் ஒருவரான சீனிவாசன் என்பவர், அந்த பெண்ணையும், அவரது மருமகன்களையும் கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், மருமகன்கள் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி சீனிவாசனை கொலை செய்துள்ளார். 

இந்நிலையில் சீனிவாசன்  மனைவி சுகுணாம்மா தனது கணவரின் கொலைக்கு காரணம் அப்பெண்ணும் , அவரின் மருமகன்கள்  என போலீசாரிடம்  புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து புகாரை வாபஸ் பெறுமாறு சுகுணாம்மாவுக்கு மிரட்டல் வந்த நிலையில் இதுகுறித்தும் அவர் போலீசில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.