×

மனைவியின் 15 வயது தங்கையை கர்ப்பமாக்கிய காண்ட்ராக்டர்: அதிர்ச்சி தரும் பின்னணி!

கன்னியாகுமரி : மனைவியின் தங்கையை பலாத்காரம் செய்த ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டை சேர்ந்தவர் கட்டிட காண்ட்ராக்டர் ஐயப்பன். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார், ஐயப்பனிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால், தன்னுடைய குடும்பத்தை நன்றாக கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி சரண்யாவின் தங்கையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஐயப்பன்,
 

கன்னியாகுமரி : மனைவியின் தங்கையை பலாத்காரம் செய்த  ஒருவரை போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டை சேர்ந்தவர் கட்டிட காண்ட்ராக்டர் ஐயப்பன். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார், ஐயப்பனிடம்  பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால், தன்னுடைய குடும்பத்தை நன்றாக கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில் ஐயப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி சரண்யாவின் தங்கையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஐயப்பன், இவள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். வயது  கோளாறால் அவளது காதலனால் கர்ப்பமாகி விட்டாள். இவளுக்குக் கருக்கலைப்பு செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஐயப்பனின்  நடவடிக்கையில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால்  அதற்குள் ஐயப்பன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதையடுத்து சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி அப்பகுதியைச்  சேர்ந்த இளைஞரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதைச் சகஜமாகப் பேசக்கூடிய அக்காவின் கணவர் ஐயப்பனிடம்  தெரிவித்துள்ளார். ஐயப்பனும்  சிறுமியின் காதலுக்கு உதவுவது போல நடித்துள்ளார். ஒருநாள் காதலன் உன்னைப் பார்க்க வேண்டும் என்று அழைக்கிறான் என்று கூறி சிறுமியைத் தனிமையில் அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படியே ஆறு மாத காலம் சிறுமியிடம் ஐயப்பன் அத்துமீறியதால் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதை யாருக்கும் தெரியாமல் கலைக்கவே காதலன் பெயரைக் கூறிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தது தெரியவந்தது. 

 இதையடுத்து தலைமறைவான ஐயப்பனை போக்ஸோ  சட்டத்தின் கீழ்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.