×

மணக்கோலத்தில் இருந்த ராணுவ அதிகாரியை கையும் களவுமாக பிடித்த முதல் மனைவி: சுவாமிமலையில் பரபரப்பு!

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய கொள்ளத் தயாரான ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் : மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய கொள்ளத் தயாரான ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். இவருக்கு செல்லாராணி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மகள் மராட்டியத்தில் உள்ள ஒரு
 

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய கொள்ளத் தயாரான ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.  

கும்பகோணம் : மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய கொள்ளத் தயாரான ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.  

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். இவருக்கு  செல்லாராணி என்ற மனைவியும்,  ஒரு மகன் மற்றும் ஒரு மகள்   உள்ளனர். மகன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மகள் மராட்டியத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். 42 வயதான சுபாஷ்சந்திரபோஸ் அலகாபாத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே சுபாஷ்சந்திரபோஸுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய நினைத்த சுபாஷ், மதுரையில் உள்ள ஒருவரை சந்தித்து தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி அவரது பெண்ணை பெண் கேட்டுள்ளார். இதை நம்பிய அவரும் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல, கும்பகோணம் சுவாமி மலையில் நேற்று இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. சுபாஷ் மணக்கோலத்தில் தயாராக இருந்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்து ஊரிலிருந்து கிளம்பி வந்த அவரது மனைவி, சுவாமிமலை காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  சுவாமிமலைக்கு சென்று  திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். இதைக்கண்ட பெண்ணின் குடும்பத்தார்க்கு சுபாஷுக்கு ஏற்கனவே திருமணமான தகவல் அப்போதுதான் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் ராணுவ அதிகாரி சுபாஷை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.