×

மகளின் சாவுக்கு ஏழு ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த முதியவர்: தேனியில் பரபரப்பு!?

மகள் சாவுக்கு காரணமாக இருந்த நபரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி : மகள் சாவுக்கு காரணமாக இருந்த நபரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சீலையம்பட்டியை சேர்ந்தவர் கோச்சடை என்ற குருசாமி. இவருக்கு அம்சவள்ளி என்ற வாய்பேச முடியாத பெண் ஒருவர் இருந்துள்ளார். அம்சவள்ளியுடன் அதே ஊரை சேர்ந்த, ரத்தினவேல்பாண்டி என்பவர் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அம்சவள்ளி
 

மகள் சாவுக்கு  காரணமாக இருந்த நபரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி : மகள் சாவுக்கு  காரணமாக இருந்த நபரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம்  சீலையம்பட்டியை சேர்ந்தவர் கோச்சடை என்ற குருசாமி. இவருக்கு அம்சவள்ளி என்ற வாய்பேச முடியாத பெண் ஒருவர் இருந்துள்ளார். அம்சவள்ளியுடன் அதே ஊரை சேர்ந்த,  ரத்தினவேல்பாண்டி என்பவர் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அம்சவள்ளி  கர்ப்பமானார். தான் கர்ப்பமாக இருப்பதை  ரத்தினவேல்பாண்டியிடம் தெரிவித்த அம்சவள்ளி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு ரத்தினவேல் மறுப்பு தெரிவிக்கவே அம்சவள்ளி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து போன குருசாமி மகள் சாவுக்கு  காரணமான ரத்தினவேல்பாண்டியை பழிதீர்க்க காத்திருந்துள்ளார். 

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன்பு, ரத்தினவேல் இருசக்கர வாகனத்தில் வேப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த குருசாமி மற்றும்  அவரது மகன் வீமராஜா இருவரும்  ரத்தினவேலை தாக்கியதோடு, கத்தியால் குத்தி  கொலை செய்துள்ளனர். பின்னர் தந்தையும், மகனும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரத்தினவேல்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான குருசாமி மற்றும் வீமராஜா ஆகியோரை  கைது செய்தனர்.

 இதையடுத்து குருசாமி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘ திருமண ஆசைகாட்டி எனது மகளை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ரத்தினவேல்பாண்டியை பழிதீர்க்க நினைத்தேன். அதனால் நானும் எனது மகனும் சேர்ந்து அவரை கொலைசெய்தோம்’ என்று  கூறியுள்ளார்.