×

பைக்கில் சென்ற அதிமுக பிரமுகர் வெட்டி கொலை…கோவில்பட்டியில் பரபரப்பு!

நகராட்சி 5-வது வார்டு அதிமுக பிரதிநிதியாக உள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கோவில்பட்டி நகராட்சி 5-வது வார்டு அதிமுக பிரதிநிதியாக உள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பாலமுருகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ள கோயில் முன்பு அவரை வழிமறித்த சிலர் அவரை
 

நகராட்சி 5-வது வார்டு அதிமுக பிரதிநிதியாக உள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கோவில்பட்டி நகராட்சி 5-வது வார்டு அதிமுக பிரதிநிதியாக உள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு பாலமுருகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ள கோயில் முன்பு அவரை வழிமறித்த சிலர் அவரை கரும்பால் தாக்கியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில்  இருந்து நிலைதடுமாறி கீழே  விழுந்த அவரை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 

இதை  தொடர்ந்து சம்பவ  இடத்துக்கு வந்த கோவில்பட்டி போலீசார், பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொலைசெய்யப்பட்ட பாலமுருகன் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். அதனால்  முன்விரோதம் காரணமாக பாலமுருகன் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.