×

பேச மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை ! கிராமத்தில் வசிக்கும் இளைஞனின் கொடூர செயல் !

கல்லூரி மாணவியான 18 வயதான அந்த பெண், வயலில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த உறவினர்களுக்கு உணவு அளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பவன் என்ற இளைஞர் தடுத்து நிறுத்தினார். உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் தன்னுடன் பேச மறுத்த பெண்ணை இளைஞர் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் ஜஸ்ரானா தாலுகா அதிகாரி கூறுகையில் கல்லூரி மாணவியான 18 வயதான அந்த பெண், வயலில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த உறவினர்களுக்கு
 

கல்லூரி மாணவியான 18 வயதான அந்த பெண், வயலில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த உறவினர்களுக்கு உணவு அளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பவன் என்ற இளைஞர் தடுத்து நிறுத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் தன்னுடன் பேச மறுத்த பெண்ணை இளைஞர் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் ஜஸ்ரானா தாலுகா அதிகாரி கூறுகையில் கல்லூரி மாணவியான 18 வயதான அந்த பெண், வயலில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த உறவினர்களுக்கு உணவு அளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பவன் என்ற இளைஞர் தடுத்து நிறுத்தினார். அவர் தன்னிடம் பழகுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார். பின்னர் ஏற்கனவே பழகிய விவரங்களை பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார். அதற்கு பெண் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் சென்றதால் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மகள் காணவில்லை என பெற்றோர் தேடத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அந்த இளைஞன் கிராமத்திற்குள் நுழைந்தபோது கிராமவாசிகள் பிடித்து அவனை உதைத்தனர். பின்னர் அந்த பெண் உடல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டினான். தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பவன் என்ற அந்த இளைஞரை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.