×

பெற்ற மகள்களை கொன்று, காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

பெற்ற குழந்தைளை கொலை செய்துவிட்டு காதலருடன் ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: குழந்தைகளை கொலை செய்துவிட்டு காதலருடன் ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தனசேகர். அவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு மகாலட்சுமி, ஸ்ரீலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயந்திக்கும் அவரது உறவினர் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம்
 

பெற்ற குழந்தைளை கொலை செய்துவிட்டு காதலருடன் ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: குழந்தைகளை கொலை செய்துவிட்டு காதலருடன் ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தனசேகர். அவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு மகாலட்சுமி, ஸ்ரீலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயந்திக்கும் அவரது உறவினர்  கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதையடுத்து கடந்த 27-ம் தேதி கோபாலகிருஷ்ணனுடன் தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்கு ஜெயந்தி சென்றுள்ளார்.அப்போது விடுதி அறையில் குழந்தை மகாலட்சுமியை,ஜெயந்தி தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு கோபால கிருஷ்ணனுடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மற்றொரு குழந்தை ஸ்ரீலட்சுமியுடன் ஜெயந்தியும், அவரது காதலன் கோபாலகிருஷ்ணனும் விஜயவாடாவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டை முகவரியை வைத்து விசாரணை செய்ததில் குழந்தையைக் கொன்றுவிட்டு இவர்கள் தப்பிச்சென்றது ஆந்திர போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.