×

பெற்ற மகளை துணியால் இடுப்பில் கட்டி கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட செவிலியர் !

கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த சரசு அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது மகளுடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கணவர் இறந்த சோகத்தில் மனைவி தனது 6 வயது பெண் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சரசு இவருக்கும் திருவையாறு சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் வைஷாலி என்ற பெண் குழந்தை உள்ளார்.
 

கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த சரசு அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது மகளுடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

கணவர் இறந்த சோகத்தில் மனைவி தனது 6 வயது பெண் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சரசு இவருக்கும் திருவையாறு சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் வைஷாலி என்ற பெண் குழந்தை உள்ளார். சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த சரசு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

கார்த்திகேயன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த திடீர் தற்கொலை முடிவு சரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த சரசு அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது மகளுடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு  தனது மகளுடன் சென்ற சரசு மகளை இடுப்பில் துணியால் கட்டிக்கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கஞ்சனூர் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ததோடு சரசு  மற்றும் வைஷாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் இறந்த சோகம் தாளாமல் மனைவி தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.