×

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை: வடசென்னையில் பதற்றம்!?

பிரபல ரவுடி வல்லரசு, என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் வடசென்னை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை: பிரபல ரவுடி வல்லரசு, என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் வடசென்னை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வல்லரசு. இவர் மீது ஏராளமான கொலை , கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதனால் இவர் போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் தனது கூட்டாளிகளுடன் வியாசர்பாடி பகுதியில் நின்று கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
 

பிரபல ரவுடி வல்லரசு, என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட  சம்பவத்தால்  வடசென்னை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை: பிரபல ரவுடி வல்லரசு, என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட  சம்பவத்தால்  வடசென்னை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை வியாசர்பாடி எம்.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வல்லரசு. இவர் மீது ஏராளமான கொலை , கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதனால் இவர் போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று இவர் தனது கூட்டாளிகளுடன் வியாசர்பாடி பகுதியில் நின்று கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு  வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலரான பவுன்ராஜ், சக காவலர்களுடன் சென்று ரவுடிகளை கைது செய்ய முயற்சித்துள்ளார். அப்போது வல்லரசு கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியுள்ளார். இதில்  முதல்நிலை காவலரான பவுன்ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்காப்புக்காக போலீசார் நடத்திய தொடர் தாக்குதலில் ரவுடி வல்லரசு சுட்டுக் கொல்லப்பட்டார். 

படுகாயம் அடைந்த காவலர் பவுன்ராஜிக்கு சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.