×

பிரசவத்தின் போது துண்டான குழந்தையின் தலை : அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!

குழந்தையை வெளியில் எடுக்க முயற்சித்த போது, தலை துண்டாகி உடல் மட்டும் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாவித்ரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒருவர் குழந்தையை வெளியில் எடுக்க முயற்சித்த போது, தலை துண்டாகி உடல் மட்டும் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர், உண்மையை மறைத்து, தாயின் நிலை
 

குழந்தையை வெளியில் எடுக்க முயற்சித்த போது, தலை துண்டாகி உடல் மட்டும் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல்  மாவட்டத்தைச் சேர்ந்தவர்  சாவித்ரி.  நிறைமாத கர்ப்பிணியான இவர்  அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒருவர் குழந்தையை வெளியில் எடுக்க முயற்சித்த போது, தலை துண்டாகி உடல் மட்டும் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர், உண்மையை மறைத்து, தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளது  என்று கூறி ஹைதராபாத் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல  பரிந்துரைத்துள்ளார்.




அதன்படி அங்கு சாவித்ரியை அவரது உறவினர்கள் அழைத்து சென்ற நிலையில் அங்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், சிசுவின் உடல் மட்டுமே தாயின் கர்ப்பப்பையில் உள்ளது.  தலை துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

 இதனால் ஆத்திரமடைந்த சாவித்ரி உறவினர்கள் அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனைக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.