×

பாமக நிர்வாகி கொலை: திமுக நிர்வாகி மகன் கைது!

அரியலூரில் சரண்ராஜ் என்பவர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் : அரியலூரில் சரண்ராஜ் என்பவர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். திமுக-வின் ஒன்றியச் செயலாளரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ம.க பிரமுகரான கருணாநிதி என்பவரும் முன்பகை இருந்துள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஜோதிவேலின் மகன் விக்கி மற்றும் அவரின் நண்பர் ராஜா ஆகியோர் ஏலாக்குறிச்சி பெட்ரோல் பங்கில்
 

அரியலூரில் சரண்ராஜ் என்பவர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் : அரியலூரில் சரண்ராஜ் என்பவர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். திமுக-வின் ஒன்றியச் செயலாளரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ம.க பிரமுகரான கருணாநிதி என்பவரும் முன்பகை இருந்துள்ளது. இதையடுத்து  கடந்த ஏப்ரல் மாதம் ஜோதிவேலின்  மகன் விக்கி மற்றும் அவரின் நண்பர் ராஜா ஆகியோர் ஏலாக்குறிச்சி பெட்ரோல் பங்கில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டனர்.  இந்த வழக்கில் கருணாநிதியின் மகன் சரண்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், சரண்ராஜை நேற்றிரவு மர்மநபர் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சரண்ராஜ் உயிரிழந்தார்.  இதுகுறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கி திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் மகன்  உட்பட 6 பேரை கீழப்பழுவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.