×

பழிக்கு பழி…வீடு புகுந்து தாய் – மகளை வெட்டிய இளைஞர்!

பால்வீரணன் என்பவரது மகன் மதன்குமார். இவர் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குடையான்பட்டியை சேர்ந்தவர் முனிப்பாண்டி. அரசு பேருந்து ஓட்டுநராக இவருக்கு கலா என்ற மனைவியும் ஆனந்தசுவேதா என்ற மகளும் உள்ளனர். அதேபகுதியை சேர்ந்த பால்வீரணன் என்பவரது மகன் மதன்குமார். இவர் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு
 

பால்வீரணன் என்பவரது மகன் மதன்குமார். இவர்   கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள  கொக்குடையான்பட்டியை சேர்ந்தவர் முனிப்பாண்டி. அரசு பேருந்து ஓட்டுநராக இவருக்கு கலா என்ற மனைவியும்  ஆனந்தசுவேதா என்ற மகளும் உள்ளனர். அதேபகுதியை சேர்ந்த பால்வீரணன் என்பவரது மகன் மதன்குமார். இவர்   கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முனிப்பாண்டி வீட்டின் அருகே மதன்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். இதை முனிப்பாண்டி  கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த மதன்குமார்,  நேற்று காலையில்  கத்தியுடன் பைக்கில் முனிப்பாண்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கிருந்த அவரின் மனைவி மற்றும் மகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்  காயமடைந்த கலாவையும் ஆனந்தசுவேதாவையும்   உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.