×

பத்து ஆண்டுகளாகியும் ஓயாத சண்டை: ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய தம்பதி!

குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம்: குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றம் சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் மதன். இவருக்கு மனைவி கௌசல்யா என்ற மனைவியும், 9 வயதில் வெற்றிமாறன் என்ற மகனும், பிரவீனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். மதனுக்கும்
 

குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம்: குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் மதன். இவருக்கு  மனைவி கௌசல்யா என்ற மனைவியும், 9 வயதில் வெற்றிமாறன் என்ற மகனும், பிரவீனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். மதனுக்கும் கௌசல்யாவுக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகளை ஆன நிலையில், கணவன்-மனைவி இருவரும்  அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு குழந்தைகள் இருவரும் வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்பக்கமாகப் பூட்டியிருந்துள்ளது. இதனால் கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது மதனும் கௌசல்யாவும் ஒரே புடவையில் தூக்கில் பிணமாகத்  தொங்கியுள்ளனர். இதைக்கண்டு குழந்தைகள் இருவரும் கதறியுள்ளனர்.

இதையடுத்து இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது  குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.