×

நிலத்தகராறில் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை.. விழுப்புரத்தில் நடந்த பயங்கரம் !

அப்பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அதற்காக ஜானகிராமனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த குறிஞ்சிபை கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் ஜானகிராமன் என்பவர் விவசாய நிலத்தின் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அப்பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அதற்காக ஜானகிராமனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அந்த நிலம் ஜானகிராமனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஜானகிராமனுக்கும் சரவணனுக்கு அப்பகுதியில்
 

அப்பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அதற்காக ஜானகிராமனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த குறிஞ்சிபை கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் ஜானகிராமன் என்பவர்  விவசாய நிலத்தின் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அப்பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அதற்காக ஜானகிராமனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அந்த நிலம் ஜானகிராமனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு ஜானகிராமனுக்கும் சரவணனுக்கு அப்பகுதியில் இருக்கும் குளக்கரை அருகே சண்டை வந்துள்ளது. அப்போது மக்கள் அருகே இருந்ததால் அவர்கள் இரண்டு பேரையும் விளக்கிவைத்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனையடுத்து, இன்று காலை ஜானகிராமன் அவரது வீட்டில் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்துடன் கீழே கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

அதன் பின்னர் அங்கே விரைந்து சென்ற காவல் துறையினர், ஜானகிராமனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்துக் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சரவணன் கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஜானகி ராமனைக் கொலை செய்த சரவணனைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.