×

நாளை திருமணம்.. புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மைத்துனர் : தென்காசி அருகே பயங்கரம்!

இவருக்குத் தென்மலையில் உள்ள கோவில் ஒன்றில் நாளை திருமணம் நடக்கவிருந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியைச் சேர்ந்த முனியப்பன். ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் தென்மலையில் உள்ள கோவில் ஒன்றில் நாளை திருமணம் நடக்கவிருந்தது. அதனால் அவரது வீட்டுக்கு அலங்காரம் செய்ய நேற்று இரவு உறவினர்கள் பல பேர் வந்துள்ளனர். அதன் பின்னர் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் முனியப்பன் தன் கழுத்தை யாரோ அறுத்து விட்டதாகக்
 

இவருக்குத் தென்மலையில் உள்ள கோவில் ஒன்றில் நாளை திருமணம் நடக்கவிருந்தது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியைச் சேர்ந்த முனியப்பன். ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் தென்மலையில் உள்ள கோவில் ஒன்றில் நாளை திருமணம் நடக்கவிருந்தது. அதனால் அவரது வீட்டுக்கு அலங்காரம் செய்ய நேற்று இரவு உறவினர்கள் பல பேர் வந்துள்ளனர். அதன் பின்னர் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் முனியப்பன் தன் கழுத்தை யாரோ அறுத்து விட்டதாகக் கூறி கொண்டே வந்துள்ளார். உடனே வீட்டு வாசலில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து சென்ற சிவகிரி போலீசார் முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முனியப்பனின் தங்கை கணவர்  வீரசங்கிலி என்பவருடன் இவருக்கு அன்று தகராறு நடந்தது என்றும் அப்போது முனியப்பன்  வீரசங்கிலியைத் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.  அந்த ஆத்திரத்தில் தான் குடிபோதையில் வந்து முனியப்பனைக் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தப்பியோடிய  வீரசங்கிலியை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.