×

நண்பர் வீட்டில்” பலகாரம்” சாப்பிட்டுவிட்டு அவர் மனைவியை “பலாத்காரம்” செய்த துரோகி – கணவரின் நண்பராலேயே கற்பிழந்த மனைவியின் கண்ணீர் கதை

இரண்டு கூட்டாளிகளை அழைத்து, அந்தப் பெண்ணை ஒதுக்குப்புறமன் இடத்திற்கு கடத்திச் சென்றார்கள் , அங்கு மூவரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர் ஒடிசாவின் கலஹந்தி மாவட்டத்தில் 26 வயது பெண் ஒருவர் தனது கணவரின் நண்பர் மற்றும் மேலும் இரண்டு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி, கோவாவில் பணிபுரியும் அவரது கணவரின்
 

இரண்டு கூட்டாளிகளை அழைத்து, அந்தப் பெண்ணை ஒதுக்குப்புறமன்  இடத்திற்கு கடத்திச் சென்றார்கள் , அங்கு மூவரும்  அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர்

ஒடிசாவின் கலஹந்தி மாவட்டத்தில் 26 வயது பெண் ஒருவர் தனது கணவரின் நண்பர்  மற்றும் மேலும்  இரண்டு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி, கோவாவில் பணிபுரியும் அவரது கணவரின் 27 வயது நண்பர்  டிசம்பர் 11 மாலை பவானிபட்னா அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சில பொருள்களை கொடுக்க  வந்துள்ளார். .அவர் இரவு அங்கே சாப்பிட்டுவிட்டு 
அங்கே  வசித்து வந்த பெண்ணின் மாமியாரின் வேண்டுகோளைத் தொடர்ந்து அந்த நபர் அந்த வீட்டிலேயே  இரவு தங்கியிருந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.
டிசம்பர் 12 ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் ஏடிஎம்-க்குச் சென்று கொண்டிருந்த நண்பரின் மனைவிக்கு   லிப்ட் கொடுத்தார் , ஆனால் அவர்  மோட்டார் சைக்கிளை நடுவழியில்  நிறுத்தி, அவரோடு  மேலும்  இரண்டு கூட்டாளிகளை அழைத்து, அந்தப் பெண்ணை ஒதுக்குப்புறமன்  இடத்திற்கு கடத்திச் சென்றார்கள் , அங்கு மூவரும்  அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர்  .
பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்தப் பெண்ணை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, சம்பவத்தை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என  எச்சரித்துவிட்டு சென்றனர் ..

பாதிக்கப்பட்டவர் பவானிபட்னா சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஒரு போலீஸ் குழு சனிக்கிழமை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் மற்றும் பெண்ணின் ஏடிஎம் அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது மற்றும் பெண்ணின் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.