×

தோட்டத்தில் பங்காளி மனைவியிடம் அத்துமீறல்…மண்வெட்டியால் அடித்து கொன்ற கணவன்!

கையை அழுத்தி பிடிப்பதுபோல் வைத்து விட்டு ஸ்விட்ச் ஆன் செய்துவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சாந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ராமரின் சித்தப்பா மகன் கலியமூர்த்தியின் மனைவி கனகாவுக்கு ராமர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கலியமூர்த்தி ராமரை மிரட்டியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து
 

கையை அழுத்தி பிடிப்பதுபோல் வைத்து விட்டு ஸ்விட்ச் ஆன் செய்துவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமர். இவருக்கு  சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சாந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் ராமரின் சித்தப்பா மகன் கலியமூர்த்தியின் மனைவி கனகாவுக்கு ராமர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கலியமூர்த்தி ராமரை  மிரட்டியும் அவர் கேட்பதாக தெரியவில்லை.

இதையடுத்து ராமர் அவரது தோட்டத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இந்த கொலைக்கான காரணம்  குறித்து போலீசார் விசாரணையில் கலியமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,  ‘எனக்கும் ராமருக்கும் நிலா தகராறு இருந்தது. இதனால் கடந்த 5 மாதமாக நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. இதனிடையே ராமர் என் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் அவரை கண்டித்தேன். கடந்த 22-ந்தேதி விவசாய தோட்டத்தில் வேலை செய்த கனகாவுக்கு ராமர் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உறவினர்களை அழைத்து 23 ஆம் தேதி பேசி சத்தியம் வாங்கினோம். ஆனால்  நான் ராமரை பின் தொடர்ந்து போய்  மண்வெட்டியால் அடித்தேன் அவர் மயங்கினார். அங்கிருந்து நான் வீட்டுக்கு வந்தேன். ஆனால் அவர் உயிரோடு இருந்தால் என்னை கொன்றுவிடுவார் என்று நினைத்து, மீண்டும் அங்கு சென்று அவர் தலையில் அடித்து கொன்றேன். பின் மின்சாரம் பயந்து இறந்துவிட்டது போல மின்மோட்டாருக்கு செல்லும் வயரை எடுத்து அவருடைய கையை அழுத்தி பிடிப்பதுபோல் வைத்து விட்டு ஸ்விட்ச் ஆன் செய்துவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார். 

இந்த கொலை சம்பவத்தில் கலியமூர்த்திக்கு உதவியாக இருந்த அவரது மனைவி மற்றும் தந்தை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.