×

தூக்கத்துல இருந்ததால தெரியாம குழந்தையை கொன்னுட்டேன்: தாயின் பகீர் வாக்குமூலம்!?

தனது மூன்று வயது குழந்தையை தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் : தனது ஆறு மாத ஆண் குழந்தையை தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்தவர் சீதாராம் குஜ்ஜர். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளது. சீதாராம் அப்பகுதியில் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். கடந்த 18 ஆம் தேதி தம்பதி குழந்தையுடன்
 

தனது மூன்று வயது குழந்தையை தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் : தனது ஆறு மாத ஆண் குழந்தையை தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்தவர் சீதாராம் குஜ்ஜர். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளது. சீதாராம் அப்பகுதியில் பள்ளியில்  ஆசிரியராக வேலை செய்கிறார். கடந்த 18 ஆம் தேதி தம்பதி குழந்தையுடன் தூங்க சென்றுள்ளனர். அதன்பிறகு நள்ளிரவு முழிப்பு ஏற்பட்டு சீதாராம் பார்த்த போது  குழந்தையைக் காணவில்லை! இதனால் பதற்றமடைந்த அவர், மகன் காணவில்லை என்று கதற…தீபிகா உள்பட மொத்த குடும்பமும் குழந்தையை தேடியுள்ளது. இறுதியில், குழந்தை தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் கிடப்பதை தீபிகாவின் மாமியார் கண்டுபிடித்துள்ளார். இதை அறிந்ததும் அனைவரும் கதறி அழுதுள்ளனர். 

இதையடுத்து  போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தாய் தீபிகா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இறுதியாக அவர் குழந்தையை  தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்துக் கூறியுள்ள போலீசார்,  தீபிகா நள்ளிரவில் எழுந்து தன் மகனை தூக்கிச்சென்று, மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் வீசியுள்ளார். பிறகு மீண்டும் வந்து தன் இடத்தில் படுத்து உறங்கியதாக கூறியுள்ளனர். தூக்கத்தில் தனக்கே தெரியாமல் இவ்வாறு செய்து விட்டேன் என்று தீபிகா அழுததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தீபிகாவுக்கு மனநிலை சரியாக இருக்கிறது என்றும் அவருக்கு பிறந்த முதல் இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தையை அவர் ஏன்  கொன்றார் என்பது தெரியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.