×

துண்டு துண்டாக வெவ்வேறு இடத்தில் சிதறிக் கிடந்த சடலம் : தாயே மகனைக் கொலை செய்த பயங்கரம்!

தொட்டமாந்துறை அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம், தொட்டமாந்துறை அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே, அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில், கம்பம் மருவரசி மஹால் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் ஒரு இளைஞரைக் கொலை செய்து சடலத்தை ஆற்றுப் பகுதியில் வீசியது
 

தொட்டமாந்துறை அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தேனி மாவட்டம், கம்பம், தொட்டமாந்துறை அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே, அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில், கம்பம் மருவரசி மஹால் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் ஒரு இளைஞரைக் கொலை செய்து சடலத்தை ஆற்றுப்  பகுதியில் வீசியது தெரிய வந்தது. 

அந்த சிசிடிவி காட்சியை வைத்து செல்வி மற்றும் அவரது மகன் பாரத் என்ற இரண்டு பேரையும் கைது செய்தனர். அதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, கொலை செய்யப்பட்டவர் செல்வியின் மகன் என்றும் அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி காசு கேட்டு வீட்டில் தொல்லை கொடுத்து வந்ததால் தன் இளைய மகனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து விட்டதாகவும் செல்வி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை, கால்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.