×

திருமணமாகாமல் காதலன் வீட்டில் வாழ்ந்த 18 வயது இளம்பெண் தற்கொலை: காரணம் இதுதான்!

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயதான இளம்பெண், சிறுகளத்தூரைச் சேர்ந்த 19 வயதான அரிகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். குன்றத்தூர்: திருமணமாகாமல் காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயதான இளம்பெண், சிறுகளத்தூரைச் சேர்ந்த 19 வயதான அரிகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு சீதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறிய
 

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயதான இளம்பெண், சிறுகளத்தூரைச் சேர்ந்த 19 வயதான அரிகிருஷ்ணன் என்பவரை   காதலித்து வந்துள்ளார்.

குன்றத்தூர்: திருமணமாகாமல் காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயதான இளம்பெண், சிறுகளத்தூரைச் சேர்ந்த 19 வயதான அரிகிருஷ்ணன் என்பவரை   காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு சீதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறிய சீதா, காதலன் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். 

சீதாவை ஏற்றுக்கொண்ட அரிகிருஷ்ணன் குடும்பத்தினர் விரைவில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்து ஒரே வீட்டில் இருவரையும் தங்க வைத்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல சீதாவுக்கு அரிகிருஷ்ணனின் மற்றொரு முகம் தெரியவந்துள்ளது. அரிகிருஷ்ணன் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். தினமும் வீட்டிற்கு வரும் போது போதையில் வரும் அரிகிருஷ்ணனை  ஒருகட்டத்தில் தட்டிக்கேட்டதால் அவர் சீதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இப்படி இரண்டு மாதமாக துன்பப்பட்டு வந்த சீதாதன்னுடைய வீட்டிற்கும் செல்ல முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து சீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, அரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். கைதாகும்போதுகூட அவன் சுயநினைவின்றி போதையிலிருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.