×

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த காதலன்…அதிர்ச்சி சம்பவம்!

நந்தினிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் என்ற இளைஞரும் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே பழகி வந்துள்ளனர். கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நந்தினி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நந்தினிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் என்ற இளைஞரும் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களின் காதல் அவர்களது பெற்றோர்களுக்குத் தெரிய வர, படித்து
 

நந்தினிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் என்ற இளைஞரும் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே பழகி வந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நந்தினி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நந்தினிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் என்ற இளைஞரும் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களின் காதல் அவர்களது பெற்றோர்களுக்குத் தெரிய வர, படித்து முடித்து வேலைக்குச் சென்றதும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத தினேஷ் உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். 

அதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்ததால் இவர்கள் இரண்டு பேரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் நந்தினியின் வீட்டுக்குச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். நந்தினி உயிரிழந்தவுடன் தானும் தற்கொலை செய்து கொள்ள எண்ணி விஷம் குடித்துள்ளார். உடனே அங்குச் சென்ற பொதுமக்கள் தினேஷை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.