×

திருச்சி அருகே எரிந்த நிலையில் கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது… கணவனே கொன்ற கொடூரம்!

திருச்சி பாத்திமாநகர் பகுதியில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் அடையாளம் தெரிந்தது. கணவனே கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே விராலிமலை பாத்திமா நகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையிலிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்திவந்தனர். அந்த பெண் காலில் மெட்டி அணிந்திருந்ததால் திருமணம் ஆனவர் என்று தெரிந்தது. குடும்ப தகராறு காரணமாக
 

திருச்சி பாத்திமாநகர் பகுதியில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் அடையாளம் தெரிந்தது. கணவனே கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே விராலிமலை பாத்திமா நகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையிலிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்திவந்தனர். அந்த பெண் காலில் மெட்டி அணிந்திருந்ததால் திருமணம் ஆனவர் என்று தெரிந்தது. குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாமா அல்லது பாலியல் வன்முறை செய்து யாராவது கொலை செய்தார்களா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர்.

திருச்சி பாத்திமாநகர் பகுதியில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் அடையாளம் தெரிந்தது. கணவனே கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே விராலிமலை பாத்திமா நகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையிலிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்திவந்தனர். அந்த பெண் காலில் மெட்டி அணிந்திருந்ததால் திருமணம் ஆனவர் என்று தெரிந்தது. குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாமா அல்லது பாலியல் வன்முறை செய்து யாராவது கொலை செய்தார்களா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் பாண்டிய நகர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் தன்னுடைய மனைவியைக் கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீசில் சரண் அடைந்துள்ளார்.

 





கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பானுரேகா என்பது தெரியவந்துள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்தியபோது, “இருவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருப்தியான தாம்பத்திய வாழ்க்கை இல்லை. இதனால், குழந்தையும் இல்லை. இதனால் ராம்குமாருக்கும் பானுரேகாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கோவிலுக்கு சென்றுவந்தால் அமைதி திரும்பும் என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். இதனால், மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் பைக்கிலேயே சமயபரம் கோவிலுக்கு வந்துள்ளார் ராம்குமார். அப்போதும் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், துப்பட்டாவை இறுக்கி பானுரேகாவை கொலை செய்திருக்கிறார் ராம்குமார். பின்னர், பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனாலும், மனம் கேட்கவில்லை என்பதால் சரண் அடைந்ததாக கூறியுள்ளார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.