×

தாய், மகளை குடும்பமே ஒன்று கூடி கொன்ற கொடூரம்: பதற வைக்கும் காரணம்!

சொத்துக்காக தாய், மகளை கொலை செய்த சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 7 உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு: சொத்துக்காக தாய், மகளை கொலை செய்த சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 7 உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த நாகண்ணா. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 20 வயதான மாதேவ பிரசாத் என்ற மகனும் 18 வயதில் கீதா என்ற மகளும் உள்ளனர்.
 

சொத்துக்காக  தாய், மகளை கொலை செய்த சம்பவத்தில்  4 பெண்கள் உட்பட 7 உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஈரோடு: சொத்துக்காக  தாய், மகளை கொலை செய்த சம்பவத்தில்  4 பெண்கள் உட்பட 7 உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த நாகண்ணா. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 20 வயதான மாதேவ பிரசாத் என்ற மகனும் 18 வயதில் கீதா  என்ற மகளும் உள்ளனர்.  நாகண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் ராஜம்மாள் தனது மகள் மற்றும் மகனுடன் கூலி வேலைக்குச்  சென்று வந்துள்ளார்.

இதையடுத்து ராஜம்மாளின் மகன் கேரளாவுக்கு வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் தாயும் மகளும் தனியாக குடிசை வீட்டில் தங்கியுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று இரவு தாயும் மகளும் தூங்கிக்கொண்டிருக்கையில் ராஜம்மாளின் வீடு  தீப்பிடித்து எரிந்தது. இதில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துள்ளனர்.இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார்,  உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து பிரச்னை காரணமாகக் குடிசை வீட்டில் தீ வைத்து இருவரும் கொல்லப்பட்டது தெரியவந்தது. ராஜம்மாள், கீதாவுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராஜம்மாளின் தந்தை, ராஜம்மாளின் தாயார்  சிவமல்லம்மா,  மாமியார் தொட்டமாதம்மா, தம்பி பிரேஸ் மற்றும் உறவினர்கள்  மாதேவம்மா, நாகரத்தினா, லிங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.