×

தலித் இளைஞரை மலத்தை உண்ண வைத்த அவலம்: மன்னார்குடியில் பரபரப்பு!?

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மலம் உண்ணவைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மலம் உண்ணவைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள திருவாண்துறை கிராமத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சாதியினரான சக்திவேல், ராஜேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தகராறு பார்க்கும் இடமெல்லாம்
 

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மலம் உண்ணவைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மலம் உண்ணவைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள  திருவாண்துறை கிராமத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்பவர்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சாதியினரான  சக்திவேல், ராஜேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் தகராறு பார்க்கும் இடமெல்லாம் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி, கொல்லிமலையை சக்திவேல், ராஜேஷ் மற்றும் ராஜ்குமார்  கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் மலத்தை உண்ண  வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். 

இந்த விவகாரம் அந்த கிராமத்தில் காட்டுத்தீயாகப் பரவ தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்துள்ளனர். 

இந்த கொடூர தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர், குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும்  என்றும் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காகக் கொல்லிமலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மனித உரிமை மீறல் என்று  பல்வேறு சமூக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.