×

தலித் இளைஞரை காதலித்த சிறுமி…உயிரோடு எரித்து கொன்ற தாய்; நாகையில் பரபரப்பு!

இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வாழ்மங்கலம் பகுதியை சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். 11ஆம் வகுப்பு படித்து வரும் ஜனனியும் அதே பகுதியை சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அந்த இளைஞர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் ஜனனிக்கு 18 வயதாக இன்னும் ஓரிரு நாட்களே இருந்த நிலையில்
 

இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வாழ்மங்கலம் பகுதியை சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.  11ஆம் வகுப்பு படித்து வரும் ஜனனியும்  அதே பகுதியை சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

 அந்த இளைஞர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் ஜனனிக்கு  18 வயதாக இன்னும் ஓரிரு நாட்களே  இருந்த நிலையில்    அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலரை கரம்பிடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த விவகாரம்  தாய் உமா மகேஸ்வரிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து மகளின் கேட்டுள்ளார்.  இதனால் தாய்க்கும் மகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி மண்ணெண்ணெயை எடுத்து வந்து மகள் மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இருப்பினும் ஜனனி சிகிச்சை பலனின்றி பலியானார். உமா மகேஷ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தாயே மகளை தீயிட்டு கொளுத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.