×

சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: ‘ஸ்கெட்ச்’ போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்!

பழனிவேலுக்கு சொரியாசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் மஞ்சுளா கடலூர்: சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவரை மனைவியே தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் என்.எல்.சி இரண்டாவது சுரங்க ஊழியர் பழனிவேல். அவரது மனைவி மஞ்சுளா . கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிவேலை காரில் கடத்திய சிலர் அவரை கொலை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி கை
 

பழனிவேலுக்கு சொரியாசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் மஞ்சுளா

கடலூர்:  சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவரை மனைவியே தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

கடலூரில் என்.எல்.சி இரண்டாவது சுரங்க ஊழியர் பழனிவேல். அவரது மனைவி மஞ்சுளா . கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிவேலை காரில் கடத்திய சிலர் அவரை கொலை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்  பழனிவேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பழனிவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  பழனிவேலின் மனைவி மஞ்சுளா  உள்பட 4 பேர் சேர்ந்து பழனிவேலை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக நெய்வேலி டவுன்சிப் போலீஸ் மஞ்சுளாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவான 3 பேரை தேடி வந்தனர். 

இதுகுறித்து மஞ்சுளா அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் கணவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இதையடுத்து பழனிவேலுக்கு சொரியாசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் மஞ்சுளா. இதனிடையே பழனிவேல் கைநிறைய சம்பாதித்தலாலும் அதை மற்றவர்களுக்குக் கொடுத்து  உதவி வந்துள்ளார். இதனால் கணவர் மீது ஆத்திரத்திலிருந்த மஞ்சுளா தம்பி ராமலிங்கத்துடன் சேர்ந்து  பழனிவேலை கொலை செய்துள்ளார். மேலும் அவரது சடலத்தையும் காரில் வைத்து எரிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.