×

‘சுவர் தகராறு’.. இரும்பு கம்பியால் தந்தை, மகள் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் !

இவர் வீட்டில் இருக்கும் சுற்றுச் சுவர் காரணமாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் பல ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி வேடுவர் காலணியில் வசித்து வருபவர் தங்கமுத்து(55). இவர் வீட்டில் இருக்கும் சுற்றுச் சுவர் காரணமாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் பல ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இவர்கள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 

இவர் வீட்டில் இருக்கும் சுற்றுச் சுவர் காரணமாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் பல ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி வேடுவர் காலணியில் வசித்து வருபவர் தங்கமுத்து(55). இவர் வீட்டில் இருக்கும் சுற்றுச் சுவர் காரணமாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் பல ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இவர்கள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பொங்கலுக்காக தங்கமுத்துவும், அவரது மகள் சுமதியும் நேற்று வெள்ளையடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஜெயராஜும் அவரது உறவினர்களும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வெள்ளையடிக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால்  தங்கமுத்துவுக்கும் ஜெயராஜுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ்,  தங்கமுத்துவையும், அவரது மகள் சுமதியையும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையாளிகளைக் கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பியோடியதால் 3 பேரையும் பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.