×

சீட்டு ஆடுவதில் தகராறு.. கொலை செய்யப்பட்டு கோவில் வாசலில் வீசப்பட்ட நபர்; பதைபதைக்கும் சம்பவம்!

சடலமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒகேனக்கல் சத்திரம் அருகே கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் வாசலில் இன்று காலை கொலை செய்யப்பட்ட சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அங்கு சென்ற காவல் ஆய்வாளர் தண்டபாணி மற்றும் பென்னாகரம் டிஎஸ்பி மேகலா சடலமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கொலை செய்யப்பட்டு
 

சடலமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒகேனக்கல் சத்திரம் அருகே கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் வாசலில் இன்று காலை கொலை செய்யப்பட்ட சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அங்கு சென்ற காவல் ஆய்வாளர் தண்டபாணி மற்றும் பென்னாகரம் டிஎஸ்பி மேகலா சடலமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்… அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தபாடி என்னும் கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் தான் கொலை செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. 

மேலும், பரிசல் ஓட்டும் பணி செய்து வந்த அவருக்கு சீட்டாடும் பழக்கம் இருந்ததும், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்து அங்கு வீசப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து துரையை கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.