×

சிவலிங்கத்தின் மீது மனித ரத்தம்: தலைவெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூவர்; கோவிலில் நடந்த பயங்கரம்!

சிவலிங்கத்தின் மீது ரத்தமும், கோவிலை சுற்றி ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். ஆந்திராவில் மூவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை அடுத்த கொத்திகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராம் மற்றும் அவரின் சகோதரி கமலம்மா. இவர்கள் இருவரும் அருகில் உள்ள சிவன் கோவிலின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுடன் பெங்களூரை சேர்ந்த லட்சுமி என்பவரும் தங்கி வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் சிவராம், கமலம்மா மற்றும் லட்சுமி ஆகிய மூவரின்
 

சிவலிங்கத்தின் மீது  ரத்தமும், கோவிலை சுற்றி ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். 

ஆந்திராவில் மூவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை அடுத்த கொத்திகோட்டா கிராமத்தைச்  சேர்ந்தவர்  சிவராம் மற்றும் அவரின் சகோதரி கமலம்மா. இவர்கள் இருவரும் அருகில் உள்ள சிவன் கோவிலின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுடன் பெங்களூரை சேர்ந்த லட்சுமி என்பவரும் தங்கி  வேலை செய்துவந்துள்ளார்.  

இந்நிலையில் சிவராம்,  கமலம்மா மற்றும் லட்சுமி ஆகிய மூவரின் தலையும் துண்டிக்கப்பட்ட நிலையில் கோவில் அருகில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட அவர்கள், அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது  ரத்தமும், கோவிலை சுற்றி ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். 

இதனால் யாரேனும் நரபலி பூஜை நடத்தி மூவரையும் கொன்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.