சிறுமியை சீரழித்து சிறை சென்றனர் – “ஜம்”முன்னு ஜாமீனில் வந்தனர் -குடும்பத்தையே “குதறி” எடுத்தனர்..
கான்பூரில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு போனவர்கள் ,ஜாமீனில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை கொடூரமாக தாக்கி கொன்றனர் .இதனால் இது உன்னாவ் 2.0 என்றழைக்கபப்டுகிறது
கான்பூரில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு போனவர்கள் ,ஜாமீனில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை கொடூரமாக தாக்கி கொன்றனர் .இதனால் இது உன்னாவ் 2.0 என்றழைக்கபப்டுகிறது
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து பலாத்காரம் செய்த குடும்ப உறுப்பினர்களை தாக்கினார்கள் .இதனால் கான்பூரிலும் உன்னாவோ போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரால் கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவரின் தாயார் இறந்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஜனவரி 8 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் தாய் மட்டுமல்லாமல் அவரது அத்தை மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
2018 ம் ஆண்டு கான்பூரில் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது .அந்த கற்பழித்த கும்பல் இப்போது ஜாமினில் ஜம்மென்று வெளியே வந்து அப்பெண்ணின் குடும் பத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .இதனால் கான்பூர் இன்னொரு உன்னாவ் போல மாறி வருகிறது
அப்பெண்ணின் தாயார் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டதாக கூறப்படுகிறது.