×

சாப்பாடு போடாத மனைவி; தற்கொலை செய்து கொண்ட கணவர்: பொள்ளாச்சியில் சோக சம்பவம்!

மனைவி சாப்பாடு போடாததால் கணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி: மனைவி சாப்பாடு போடாததால் கணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தேங்காய் உரிக்கும் வேலைசெய்து வந்த பிரகாஷ் குடிப்பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கிடைக்கும் பணத்தை மதுபோதையில் தினமும் செலவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்
 

மனைவி சாப்பாடு போடாததால் கணவர்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சி: மனைவி சாப்பாடு போடாததால் கணவர்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தேங்காய் உரிக்கும் வேலைசெய்து வந்த பிரகாஷ் குடிப்பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கிடைக்கும் பணத்தை மதுபோதையில் தினமும் செலவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்குமிடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  

இந்நிலையில் நேற்று வழக்கம்போல வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த பிரகாஷ் போதை தலைக்கேறித் தள்ளாடிய படி வந்துள்ளார். இதனால் கோபமான ரஞ்சிதா அவருடன் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து மனைவியிடம் பிரகாஷ் சாப்பாடு போட சொல்ல கணவர் மீது இருந்த கோபத்தால் சாப்பாடு போடாமல் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். 

 இதனால் மனமுடைந்த பிரகாஷ்  குடிபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய ரஞ்சிதா பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு கூச்சலிட அக்கம் பக்கத்தினர் கூடினர். இதை தொடர்ந்து  இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும்  வாசிக்க: தமிழகத்தை போல் ஹைதராபாத்திலும் அதிர்ச்சி; போலீசாரிடம் சிக்கிய குழந்தை கடத்தல் கும்பல்!