×

கோழிக்கறியால் நடந்த தகராறு: அண்ணனை தீயிட்டு கொளுத்திய தம்பி; பரபரப்பு சம்பவம்!?

கோழிக்கறி கேட்டு சண்டையிட்ட அண்ணனை தம்பியே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி: கோழிக்கறி கேட்டு சண்டையிட்ட அண்ணனை தம்பியே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் மீனாளுக்கு பிரதாப் – பிரதீஸ் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சாப்பிட வந்த பிரதாப் மதுபோதையில் எனக்கு நிறைய கோழிக்கறி துண்டுகள் வேண்டும் என்று தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதை கண்ட
 

கோழிக்கறி கேட்டு சண்டையிட்ட அண்ணனை  தம்பியே  பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி: கோழிக்கறி கேட்டு சண்டையிட்ட அண்ணனை  தம்பியே  பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியைச் சேர்ந்தவர் மீனாளுக்கு பிரதாப் – பிரதீஸ் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சாப்பிட வந்த பிரதாப் மதுபோதையில் எனக்கு நிறைய  கோழிக்கறி துண்டுகள் வேண்டும் என்று தனது  தாயிடம் சண்டை போட்டுள்ளார்.  இதை கண்ட அவரது தம்பி பிரதீஸ் தாயிடம் ஏன் தேவையில்லாமல் சண்டை போடுகிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் அண்ணன் – தம்பி இருவருக்கும் கோழிக்கறியால் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரதீஸ் அதிகாலை வீடு திரும்பியதாகத் தெரிகிறது. அப்போது வீட்டின் வெளியில்  தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை கண்டதும் ஆத்திரமடைந்த பிரதீஸ், நீ மட்டும் நிம்மதியாகத் தூங்குகிறாயா? என்று கூறி கொண்டே அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பலத்த தீ காயமடைந்த பிரதாப், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செட்டிநாடு போலீசார், பிரதீஸை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.