×

கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: தலையை பிளந்து மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்த பயங்கரம்!

பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார். சென்னை: பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். 25 வயதான இவர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தனியாக ஹரியை மர்மநபர்கள் தலை, உடம்பு, கை மற்றும் கால்களில் வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். இதில் உச்சக்கட்டமாக ஹரியின் தலையை
 

பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார். 

சென்னை: பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். 25 வயதான  இவர்  திருட்டு, வழிப்பறி  போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தனியாக ஹரியை மர்மநபர்கள் தலை, உடம்பு, கை மற்றும் கால்களில் வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். இதில் உச்சக்கட்டமாக ஹரியின் தலையை பிளந்து மூளையை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா சதுக்கம் போலீசார்,  ஹரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹரி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். மேலும் ஹரி பல்பு குமார் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு வெட்டியதாகத் தெரிகிறது. அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் ஹரி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.