×

‘கொடுமை தாங்கல நான் சாகப் போகிறேன்’..இறுதியாக காதலனுடன் இளம்பெண் பேசிய உருக்கமான ஆடியோ பதிவு!

இதில் இரண்டாவது மகள் அனுஷியா. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்தார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவருக்கு சார்லெட்பாய் மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனுஷியா. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்தார். இதையடுத்து கடந்த 24 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
 

இதில் இரண்டாவது மகள் அனுஷியா. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவருக்கு   சார்லெட்பாய் மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனுஷியா. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்தார். 

இதையடுத்து  கடந்த 24 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அனுஷியாவின் பெற்றோர் தரப்பிலோ, மகன் அனுஷியா வீட்டில் 2ஆயிரம் ரூபாய் திருடி விட்டதாகவும் அதனால்  திட்டியதால் எலி மருந்து சாப்பிட்டதாகக் கூறியுள்ளனர்.

 

ஆனால் இதை  ஏற்க மறுத்த அனுஷியா நண்பர்கள்,  பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தாயாரால் சூடுகள் போடப்பட்டு பல சித்திரவதைகளுக்கு ஆளான அனுஷியாவை பெற்றோரே கொலை செய்துவிட்டதாக  சமூகவலைதளங்களில் பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பினர். இதனால் அனுஷியா மரணத்தில் மர்மம் இருப்பதாக எண்ணிய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். 

இந்நிலையில் தற்கொலைக்கு முன் தனது காதலன் சுனிலுடன் அனுஷியா செல்போனில் பேசிய உருக்கமான ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘என்ன எங்க வீட்டில ரொம்ப கொடுமை பண்ணுறாங்க. நான் சாகப் போகிறேன். நான் இல்லை என்றால் நீ என்ன பண்ணுவ?  நான் இன்னும் கூட சாப்பிடல’ என்று கூற அதற்கு அவரது காதலனோ, ‘பார்த்து சாப்பிடு, ஏதாவது  கலந்து இருக்க போறாங்க’ என்று கூறியுள்ளார். 
இந்த ஆடியோவானது தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.