×

மனைவியின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு நடந்தே போலீஸ் ஸ்டேஷன் வந்த கணவன்…ஜன கண மன என்று பாடி வந்த கொடூரம்!

தலையை வெட்டி கையில் எடுத்தவாறு சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். கணவர் ஒருவர் தனது மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்தபடி 1.5 கிமீ நடந்தே போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள பஹதுர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அகிலேஷ் ராவத் – ரஜனி தம்பதி. இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில், உடல்நல குறைவால் குழந்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது.
 

தலையை வெட்டி கையில் எடுத்தவாறு  சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். 

கணவர் ஒருவர் தனது மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்தபடி  1.5 கிமீ நடந்தே போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள பஹதுர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  அகிலேஷ் ராவத் – ரஜனி தம்பதி. இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில்,  உடல்நல குறைவால் குழந்தை கடந்த 2 மாதங்களுக்கு  முன்பு இறந்துவிட்டது. அதிலிருந்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் சண்டை ஏற்பட அகிலேஷ் மனைவி ராஜனியை அடித்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதுடன் வீட்டின் வெளியே தரதரவென இழுத்து கொண்டு வந்த போட்டுள்ளார். இதில் ரஜனி சம்பவ இடத்திலேயே பலியானார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அகிலேஷ்  பட்டப்பகலில் மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்தவாறு  சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். 

இதை கண்ட போலீசார் அகிலேஷிடமிருந்து தலையை பறிக்க நினைத்த போது,எ அவர் அதை கொடுக்காமல்  ஜன கண மன என்று தேசிய கீதத்தை பாடியும், பாரத் மாதா கீ ஜே என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்து தலையை ஒருவழியாக வாங்கிய போலீசார் அவரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.