×

கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை; இளைஞர் கைது!

கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர் திருவனந்தபுரம்: கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள செர்புளசேரி பகுதியில் இருக்கும் பிரதான சாலையோரம் கடந்த 16-ம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனே
 

கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்

திருவனந்தபுரம்: கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள செர்புளசேரி பகுதியில் இருக்கும் பிரதான சாலையோரம் கடந்த 16-ம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குபப்திவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிளை கொண்டு ஆய்வு செய்ததில் இளம் பெண் ஒருவர் குழந்தையை வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அப்பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கல்லூரி விழா மலர் தயாரிப்பதற்காக செர்புளசேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சென்றபோது கட்சியின் மாணவர் பிரிவில் இருக்கும் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமைக்கு செய்ததாகவும், அதன் மூலம் உருவான குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தூக்கி எறிந்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பிரகாசன் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டபிரிவு 376 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். டிஎன்ஏ பரிசோதனைக்காக அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

சீதையாக நடித்த நயன்தாரா : பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!