×

கசந்து போன காதல்; காதலியை துப்பாகியால் சுட்ட இளைஞர் கைது!

தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்க்க நண்பர் ஒருவர் மூலம் இருவரும் முற்பட்டுள்ளனர். ஆனால், அப்போது காரசார விவாதம் ஏற்பட்டதால், அங்கிருந்து அப்பெண் கிளம்பி சென்றுள்ளார் லூதியானா: காதல் பிரச்னை காரணமாக தனது காதலியை இளைஞர் இருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லுதியானாவை சேர்ந்தவர் பரம்வீர் சிங். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளம் பெண் ஒருவரை இவர் காதலித்து வந்ததாகவும், இவர்களுக்கு தற்போது மனகசப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து,
 

தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்க்க நண்பர் ஒருவர் மூலம் இருவரும் முற்பட்டுள்ளனர். ஆனால், அப்போது காரசார விவாதம் ஏற்பட்டதால், அங்கிருந்து அப்பெண் கிளம்பி சென்றுள்ளார்

லூதியானா: காதல் பிரச்னை காரணமாக தனது காதலியை இளைஞர் இருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவை சேர்ந்தவர் பரம்வீர் சிங். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளம் பெண் ஒருவரை இவர் காதலித்து வந்ததாகவும், இவர்களுக்கு தற்போது மனகசப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து, தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்க்க நண்பர் ஒருவர் மூலம் இருவரும் முற்பட்டுள்ளனர். ஆனால், அப்போது காரசார விவாதம் ஏற்பட்டதால், அங்கிருந்து அப்பெண் கிளம்பி சென்றுள்ளார். தொடர்ந்து அப்பெண்ணின் பின்னால் சென்ற பரம்வீர் சிங், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முதலில் வானத்தை நோக்கி சுட்ட அவர், பின்னர் அப்பெண்ணை சுட்டுள்ளார்.

அதன்பின்னர், அங்கிருந்து துப்பாகியுடன் அவர் ஓடுவதை கண்ட போக்குவரத்து போலீசார், காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அங்கிருந்த கழிவறை ஒன்றுக்குள் நுழைந்து தாழிட்டு கொண்ட பரம்வீர் சிங்கை, சரணடையுமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக போலீசாரை மிரட்டியுள்ளார்.

ஒருவழியாக கழிவறையின் கதவை திறந்த பரம்வீர் சிங், போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். கடும் போராட்டத்துக்கு பின்னர் சுமார் 12 பேர் சேர்ந்து அவரை பிடித்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் வாசிங்க

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: முதல்வரின் வாகனத்தை நோக்கி பறந்து வந்த செருப்பு; தஞ்சாவூரில் பரபரப்பு!