×

ஒருதலைக்காதலால் 45 வயது பெண்மணியை கொன்ற 27 வயது வாலிபர்: மகள் கண்ணெதிரே நடந்த பயங்கரம்!

ஒரு தலைக்காதலால் திருமணமான 45 வயது பெண்மணியை 27 வயது வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுதில்லி: ஒரு தலைக்காதலால் திருமணமான 45 வயது பெண்மணியை 27 வயது வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் மதுபானி மாவட்டம் பன்சல்வாலா பகுதியைச் சேர்ந்த ஷியாம் யாதவ் என்பவர் டெல்லியின் நாங்லோய் பகுதியில் தங்கி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவருடன் பணிபுரிந்த திருமணமான 45 வயது பெண்
 

ஒரு தலைக்காதலால் திருமணமான 45 வயது பெண்மணியை 27 வயது வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுதில்லி: ஒரு தலைக்காதலால் திருமணமான 45 வயது பெண்மணியை 27 வயது வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார்  மாநிலம் மதுபானி மாவட்டம் பன்சல்வாலா பகுதியைச் சேர்ந்த ஷியாம்  யாதவ் என்பவர் டெல்லியின் நாங்லோய் பகுதியில் தங்கி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவருடன் பணிபுரிந்த திருமணமான 45 வயது பெண் ஒருவரை ஷ்யாம், ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஷியாமின் தொல்லை தங்க முடியாமல் அந்த பெண் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வந்த வாலிபர் அவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகளுடன் வெளியே சென்றிருந்த பெண்ணை ஷியாம் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார். மகள் கண்ணெதிரிலேயே அப்பெண் பரிதாபமாக பலியானார். இதையடுத்து மகளின் புகாரை தொடர்ந்து தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.