×

இந்த மூளையை நல்லபடியா பயன்படுத்தி இருந்தா, இந்தியா வல்லரசு ஆகிருக்குமேடா?

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டான். துணிந்து ஒரு பெண் காவலரிடம் புகார் தர, பிரதீஷை அள்ளிக்கொண்டுபோய் விசாரித்த காவல்துறைக்கு செம ஷாக். ஒன்றல்ல இரண்டல்ல, 50 பெண்களின் வாழ்க்கையில் இதேபோல் விளையாடி இருக்கிறான். அடப்பாவி, இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் நல்லவழியில் பயன்படுத்தியிருந்தா, இந்தியாவை வல்லரசாகூட மாத்தியிருக்கலாமேடா? கேரளாவில் ஒரு பெண்பித்தனை கைது செய்திருக்கிறது காவல்துறை. சிக்காதவரைக்கும் எல்லாருமே யோக்கியன்தான், இவன் கதை என்னான்னு மேல சொல்லுங்குறீங்களா? ரைட்டு. பிரதீஷ் குமார், 25. இவன் செய்த வேலையை வரிசைமாறாமல்
 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டான். துணிந்து ஒரு பெண் காவலரிடம் புகார் தர, பிரதீஷை அள்ளிக்கொண்டுபோய் விசாரித்த காவல்துறைக்கு செம ஷாக். ஒன்றல்ல இரண்டல்ல, 50 பெண்களின் வாழ்க்கையில் இதேபோல் விளையாடி இருக்கிறான். அடப்பாவி, இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் நல்லவழியில் பயன்படுத்தியிருந்தா, இந்தியாவை வல்லரசாகூட மாத்தியிருக்கலாமேடா?

கேரளாவில் ஒரு பெண்பித்தனை கைது செய்திருக்கிறது காவல்துறை. சிக்காத‌வரைக்கும் எல்லாருமே யோக்கியன்தான், இவன் கதை என்னான்னு மேல சொல்லுங்குறீங்களா? ரைட்டு. பிரதீஷ் குமார், 25. இவன் செய்த வேலையை வரிசைமாறாமல் ஃப்ளோவா சொல்றேன், இடையில டிஸ்டர்ப் ஆகாம படிங்க.

பிரதீஷின் வேலை ஃபேஸ்புக்கில் இருக்கும் திருமணமான பெண்களாக தேடித்தேடி ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் தருவது, ‘என்னை மாதிரி யோக்கியன் இன்னைய தேதிவரைக்கும் பொறக்கவே இல்லை’ என கடலை சாகுபடியில் ஈடுபடுவது, பேச்சுவாக்கில் அப்பெண்களின் கணவர்களுடைய ஃபேஸ்புக்கை கண்டுபிடிப்பது, பின்னர் அப்பெண்களின் கணவருடன் ஃபேக் ஐடியில் பெண்ணாக மாறி சல்லாபமாக பேசுவது, கணவர்களுடன் ஃபேஸ்புக்கில் சல்லாபமாக பேசியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவரவர் மனைவியரிடமே காட்டி, ‘பாத்தியா உம் புருஷன் யோக்கியதையை’ என அவளின் குட்புக்கில் இடம்பெறுவது, பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே உருவாகும் காலியிடத்தை தன் மன்மத கணைகளால் நிரப்புவது, முரண்டுபிடிக்கும் பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அவரவர் கணவரிடம் அனுப்புவதாக மிரட்டுவது என ஒரு பத்து சீரியல் வில்லன்கள் செய்வதை ஒத்த ஆளாக செய்துவந்திருக்கிறான்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டான். துணிந்து ஒரு பெண் காவலரிடம் புகார் தர, பிரதீஷை அள்ளிக்கொண்டுபோய் விசாரித்த காவல்துறைக்கு செம ஷாக். ஒன்றல்ல இரண்டல்ல, 50 பெண்களின் வாழ்க்கையில் இதேபோல் விளையாடி இருக்கிறான். அடப்பாவி, இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் நல்லவழியில் பயன்படுத்தியிருந்தா, இந்தியாவை வல்லரசாகூட மாத்தியிருக்கலாமேடா?