×

“நான் ஐந்து பேரால் பலாத்காரம் செய்யப்பட்டவள்” -நிச்சயதார்தத்தில் மணப்பெண் வெளியிட்ட ரகசியம் -கல்யாணம் நடந்ததா ?நின்றதா ?

ஹரியானா மாநிலத்தில் தினமும் பாலியல் பலாத்காரம் நடப்பது சர்வ சாதாரணமான ஒன்று .அப்படித்தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணை அந்த ஊரை சேர்ந்த ஐந்து பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர் .பிறகு அந்த பெண் அவர்கள் மீது போலிஸில் புகாரளிக்க சென்றபோது அவர்கள் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் அவர்களின் மீதான வழக்கு நீண்டு கொண்டே போனது . இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை அவர்களின் வீட்டில் அந்த பலாத்கார விஷயத்தை மறைத்து
 

ஹரியானா மாநிலத்தில் தினமும் பாலியல் பலாத்காரம் நடப்பது சர்வ சாதாரணமான ஒன்று .அப்படித்தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணை அந்த ஊரை சேர்ந்த ஐந்து பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர் .பிறகு அந்த பெண் அவர்கள் மீது போலிஸில் புகாரளிக்க சென்றபோது அவர்கள் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் அவர்களின் மீதான வழக்கு நீண்டு கொண்டே போனது .


இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை அவர்களின் வீட்டில் அந்த பலாத்கார விஷயத்தை மறைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டபோது, நிச்சயதார்த்தத்தில் அந்த பெண் தன்னுடைய வருங்கால கணவனிடம் தன்னை ஐந்து பேர் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினார் .
அதை கேட்ட அந்த மணமகன் ஜிதேந்தர் ஐந்து நிமிடம் மவுனமாக இருந்து விட்டு ,நான் உன்னை இந்த நிலையில் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை மணந்து கொண்டார் .அந்த தம்பதிகளுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது .
முற்போக்கு வாதியான ஜிதேந்திர இதுபற்றி கூறுகையில் தன்னுடைய தாய் தன்னை ஆணும்பெண்ணும் சமமென்று கூறி வளர்த்ததாகவும் ,ஹார்மோன் ஏற்றதாழ்வுகள்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியசாமென்றும் ,அதனால் தான் பூஜாவை திருமணம் செய்து கொண்டதால் அந்த பாலியல் குற்றவாளிகளுக்கு இதுதான் மிகப்பெரிய தண்டனை என்று கூறினார் .மேலும் அவர் கூறுகையில் பூஜாவின் திருமணம் செய்துகொள்ள விடாமல் அவர்களிடமிருந்து நிறைய மிரட்டல் வந்ததாகவும் அதையும் மீறி தான் அவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வதாகவும் கூறினார் .