4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்!
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரயில்வே போலீஸ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினமும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அடங்கும்.
மும்பை குர்லா ரயில் நிலையத்தில்,சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் சிறுமியிடம் அன்பாக பேசியுள்ளார். இதையடுத்து சிறுமியை அவர் தன் மடியின் மேல் அமர வைத்து கொண்டுள்ளார். பின்னர் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர் சிறுமி வசித்து வந்த பகுதியில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவர, அவர் நேருநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சுமை தூக்குபவரை விசாரித்ததில் அவர், பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி போலீசாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையும் வாசிக்க: குடிமகன்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக் என்னென்னு தெரியுமா?