×

காவலர் தூக்கிட்டு தற்கொலை: காதலியுடன் ஏற்பட்ட தகராறு தான் காரணமா?!

காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் : காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்தவர் கல்லாணை. இவர் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்காலிக பணிநீக்கத்திலிருந்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் உள்ள நண்பர், சுந்தரம் என்பவர் வீட்டுக்கு வந்த கல்லாணை , வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்துத்
 

காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் : காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூரைச் சேர்ந்தவர் கல்லாணை. இவர் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்காலிக பணிநீக்கத்திலிருந்து வருகிறார். 

இந்நிலையில் மதுரையில் உள்ள நண்பர், சுந்தரம் என்பவர் வீட்டுக்கு வந்த கல்லாணை , வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில்  மனமுடைந்து, கல்லாணை தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவலர்கள் பலர் பணிச்சுமை காரணமாக மன  அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருவது  குறிப்பிடத்தக்கது.