×

‘காஞ்சனா 3’ படம் பார்க்க சென்றவர் அடித்து கொலை: பார்க்கிங் கட்டணத்தால் நடந்த விபரீதம்!?

சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற செல்வராஜுடன் சேர்ந்து சேகர் என்பவரும் பரணியை தாக்கியுள்ளார். மேலும் அவர்கள் பரணியை மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று தாக்கியுள்ளனர். பெங்களூர்: தியேட்டர் பார்க்கிங் கட்டணம் தரமறுத்த நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள லாவண்யா தியேட்டரில் காஞ்சனா 3 படத்தை பார்க்க பரணிதரன் என்பவர் வந்துள்ளார். தியேட்டருக்கு அவர் இருசக்கர வாகனத்தில் வந்ததால் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது பார்க்கிங் கட்டணமாக 10
 

சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற செல்வராஜுடன் சேர்ந்து சேகர் என்பவரும் பரணியை தாக்கியுள்ளார். மேலும் அவர்கள்  பரணியை மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று தாக்கியுள்ளனர்.  

பெங்களூர்:  தியேட்டர் பார்க்கிங் கட்டணம் தரமறுத்த நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் உள்ள லாவண்யா தியேட்டரில் காஞ்சனா 3 படத்தை பார்க்க பரணிதரன்  என்பவர் வந்துள்ளார். தியேட்டருக்கு அவர் இருசக்கர வாகனத்தில் வந்ததால் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது பார்க்கிங் கட்டணமாக 10 ரூபாய் அளிக்க வேண்டும் என்று அங்கு பணிபுரியும் செல்வராஜ் என்பவர் கேட்க அதை பரணிதரன்  தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் பரணிதரன் மற்றும் செல்வராஜ் இருவருக்குமிடையே வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற செல்வராஜுடன் சேர்ந்து சேகர் என்பவரும் பரணியை தாக்கியுள்ளார். மேலும் அவர்கள்  பரணியை மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று தாக்கியுள்ளனர்.  இதனால் நிலை குலைந்து போன அவர்  மயங்கியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தியேட்டர் ஊழியர்கள் இருவரும், பரணியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால்  அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் இது குறித்து  போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  செல்வராஜ் மற்றும் சேகர் இருவரையும் கைது செய்து சிறையில்  அடைத்தனர். 

படம் பார்க்க சென்ற ஒருவர் பார்க்கிங் கட்டணத்திற்காக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.