×

காங்கிரஸ் பிரமுகர் ஓட விட்டு சரமாரியாக வெட்டிக் கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு !

சம்பாசிவம் அவரது தங்கையின் திருமணத்திற்காக உறவினர்களுக்குப் பத்திரிகை வைக்க நேற்று தனது நண்பருடன் காரில் கிருமாப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். புதுச்சேரியை அடுத்த கிருமாப்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(35). இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர். சம்பாசிவம் அவரது தங்கையின் திருமணத்திற்காக உறவினர்களுக்குப் பத்திரிகை வைக்க நேற்று தனது நண்பருடன் காரில் கிருமாப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்து, அவரை கொலை செய்ய
 

சம்பாசிவம் அவரது தங்கையின் திருமணத்திற்காக உறவினர்களுக்குப் பத்திரிகை வைக்க நேற்று தனது நண்பருடன் காரில்  கிருமாப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்த கிருமாப்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(35). இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர். சம்பாசிவம் அவரது தங்கையின் திருமணத்திற்காக உறவினர்களுக்குப் பத்திரிகை வைக்க நேற்று தனது நண்பருடன் காரில்  கிருமாப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்து, அவரை கொலை செய்ய நாட்டுக் குண்டு வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்பசிவம் காரில் இருந்து கீழே இறங்கித் தப்பியோட முயன்றுள்ளார். இருப்பினும் அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சாம்பசிவத்தை ஓட விட்டு அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாம்பசிவத்தின் உடலை தார்ப்பாய் கொண்டு மூடி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாம்பசிவத்தின் மாமா, முன்னாள் கவுன்சிலர் வீரப்பன்  இதே போல வெட்டிக் கொல்லப்பட்டதால் அதற்குப் பழிவாங்கும் நோக்கோடு இந்த  கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். காங்கிரஸ் பிரமுகரை ஓட விட்டு வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.