×

கள்ளக்காதலியின் கள்ளக்காதலனை மருத்துவமனைக்குள் புகுந்து வெட்டிய ஆசாமி…சென்னையில் பயங்கரம்!

இருவரும் திருவொற்றியூர் கார்கில் நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக உள்ளார். நேற்று காலை வழக்கம்போல ரவி பணிக்குச் சென்று புறநோயாளிகள் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில்
 

இருவரும் திருவொற்றியூர் கார்கில் நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.  

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக உள்ளார். நேற்று காலை வழக்கம்போல ரவி பணிக்குச் சென்று புறநோயாளிகள் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர்  ரவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகரை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. அதே மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வரும் தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் ஐயப்பனுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது. ராஜேஸ்வரிக்கு  கணவர் இல்லாததால் இருவரும் திருவொற்றியூர் கார்கில் நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.  

இதை தொடர்ந்து ராஜேஸ்வரிக்கு ரவியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது ஐயப்பனுக்கு  தெரியவர, ரவியை கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்கள்  தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த ஐயப்பன்  ரவியை வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.