×

கள்ளக்காதலனுடன் சிக்கிய மருமகள்…தட்டிக்கேட்ட மாமியாரை பாம்பை கடிக்க விட்டு கொன்ற பயங்கரம்!

சந்தேகம் வராது என்று நினைத்த அவர், தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டபடியே மாமியாரை கொன்றுள்ளார். கள்ளத்தொடர்பைத் தட்டிக்கேட்ட மாமியாரை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள் மற்றும் அவரின் கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது அம்மா மற்றும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே விடுமுறை நாட்களில் அந்த இளைஞர் ராணுவத்திலிருந்து வீட்டுக்கு வந்து செல்வதை
 

சந்தேகம் வராது என்று நினைத்த அவர், தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டபடியே மாமியாரை கொன்றுள்ளார்.

கள்ளத்தொடர்பைத் தட்டிக்கேட்ட மாமியாரை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள் மற்றும் அவரின் கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது  அம்மா மற்றும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே விடுமுறை நாட்களில் அந்த இளைஞர் ராணுவத்திலிருந்து வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தனது காதலனை தனிமையில் சந்திப்பது போன் பேசுவது என  இருந்துள்ளார். இந்த விஷயம் அரசல்புரசலாக அப்பெண்ணின் மாமியார் கைது செல்ல, அவர் தன்  மருமகளை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்  இப்படியே போனால் விஷயம் கணவருக்கு சென்றுவிடும் என்று பயந்து, தனது மாமியாரை கொல்ல  திட்டம் தீட்டியுள்ளார்.  பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றால் சந்தேகம் வராது என்று நினைத்த அவர், தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டபடியே மாமியாரை கொன்றுள்ளார்.

இருப்பினும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசில் கூறியதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதை தொடர்ந்து இறந்த பெண்மணியின் மருமகள் மற்றும் அவரின் கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் கைது செய்தது  குறிப்பிடத்தக்கது.