×

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த 4 வயதுக் குழந்தையை மது அருந்த வைத்த கொடூர தாய்!

பகலூர் என்னும் பகுதியைச் சேர்ந்த நந்தினி(27) என்னும் பெண்ணுக்கு 4 வயதில் நயனாஸ்ரீ என்னும் பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பகலூர் என்னும் பகுதியைச் சேர்ந்த நந்தினி(27) என்னும் பெண்ணுக்கு 4 வயதில் நயனாஸ்ரீ என்னும் பெண் குழந்தை உள்ளது. நந்தினி தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கணவனைப் பிரிந்து தனியாகக் குழந்தையுடன் வசித்து வருகிறார். நந்தினிக்கும் அவரது கணவருக்கும் இன்னும் விவாகரத்து ஆக வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நந்தினிக்கு
 

பகலூர் என்னும் பகுதியைச் சேர்ந்த  நந்தினி(27) என்னும் பெண்ணுக்கு 4 வயதில் நயனாஸ்ரீ என்னும் பெண் குழந்தை உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பகலூர் என்னும் பகுதியைச் சேர்ந்த  நந்தினி(27) என்னும் பெண்ணுக்கு 4 வயதில் நயனாஸ்ரீ என்னும் பெண் குழந்தை உள்ளது. நந்தினி தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கணவனைப் பிரிந்து தனியாகக் குழந்தையுடன் வசித்து வருகிறார். நந்தினிக்கும் அவரது கணவருக்கும் இன்னும் விவாகரத்து ஆக வில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், நந்தினிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அசோக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம். இவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி நந்தினி வீட்டில் தனிமையிலிருந்து வந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேருக்கும் குடிப்பழக்கமும் இருக்கிறதாம். நந்தினியின் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். 

நேற்று வழக்கம் போல அசோக்கும் நந்தினியும் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது,  நயனாஸ்ரீ அழுது கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி குழந்தை அழுததாலும், இவர்கள் தனிமையில் இருப்பதற்கு  நயனாஸ்ரீ இடையூறாக இருந்ததாலும் நயனாஸ்ரீக்கு மது ஊற்றிக் கொடுத்துக் குடிக்கும் படி சொல்லியுள்ளார். அது மதுவென்று அறியாத அந்த குழந்தை, அதனை குடித்துள்ளது. உடனே அந்தக் குழந்தை  ரத்த வாந்தி எடுத்துள்ளது. 

குழந்தையின் சத்தம் கேட்டு அங்கே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் அசோக்கையும் நந்தினியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக, தாயே குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.