×

கரப்பான் பூச்சி மருந்தை ஸ்ப்ரே செய்து இரும்பு கம்பியால் மகனை அடித்து கொன்ற தந்தை…அதிர்ச்சி தரும் சம்பவம்!

இருப்பினும் அவரை பேச்சை கேட்காத ரஞ்சித் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டுள்ளார். புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருபவர் குமார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் ரஞ்சித் பிரஞ்சு குடியுரிமை பெற்று மனைவியுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி ரஞ்சித் விடுமுறைக்காகத் தான் மட்டும் புதுச்சேரிக்கு வந்துள்ளார். ரஞ்சித் வந்ததிலிருந்தே தந்தை குமாரிடம் 2 கோடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
 

இருப்பினும் அவரை பேச்சை கேட்காத  ரஞ்சித் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டுள்ளார். 

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருபவர்  குமார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் ரஞ்சித் பிரஞ்சு குடியுரிமை பெற்று மனைவியுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி ரஞ்சித் விடுமுறைக்காகத் தான் மட்டும் புதுச்சேரிக்கு வந்துள்ளார். ரஞ்சித் வந்ததிலிருந்தே தந்தை குமாரிடம் 2 கோடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். அதற்கு குமாரோ, சொத்தை பக்கம் பிரித்ததும் தருகிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரை பேச்சை கேட்காத  ரஞ்சித் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டுள்ளார். 

அதேபோல் சம்பவத்தன்று ரஞ்சித் தனது தாயை தலையணையை முகத்தில் அழுத்தி கொல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், ரஞ்சித்தின் முகத்தில் கரப்பான்பூச்சி மருந்தை எடுத்து  அடித்துள்ளார்.பின்பு அவர் மயங்கியதும் கை, கால்களை கட்டிப்போட்டு இரும்பு கம்பியால்  தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அரியாங்குப்பம்  காவல்நிலையத்திற்கு போன் செய்து நடந்ததைக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்டரஹ சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.