×

கணவர் கண் எதிரே இளம்பெண் கற்பழிப்பு! மருத்துவரிடம் சென்ற போது விபரீதம்!

நாடு போகிற போக்கு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் குறித்தான பயத்தை அடிவயிற்றில் அமிலம் போல சுரக்கச் செய்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் தவித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அந்த பகுதியில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு மருத்துவரைப் பார்ப்பதற்காக தனது கணவர் துணையுடன் சென்றிருக்கிறார். நாடு போகிற போக்கு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் குறித்தான பயத்தை அடிவயிற்றில் அமிலம் போல சுரக்கச் செய்கிறது.
 

நாடு போகிற போக்கு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் குறித்தான பயத்தை அடிவயிற்றில் அமிலம் போல சுரக்கச் செய்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் தவித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அந்த பகுதியில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு மருத்துவரைப் பார்ப்பதற்காக தனது கணவர் துணையுடன் சென்றிருக்கிறார்.

நாடு போகிற போக்கு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் குறித்தான பயத்தை அடிவயிற்றில் அமிலம் போல சுரக்கச் செய்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் தவித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அந்த பகுதியில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு மருத்துவரைப் பார்ப்பதற்காக தனது கணவர் துணையுடன் சென்றிருக்கிறார். மருத்துவரைச் சந்தித்து விட்டு, கணவர் ரிக்‌ஷாவை ஓட்டி வர, இருவரும் தங்கள் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், ரிக்‌ஷா ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்தது. 
ரிக்‌ஷா ஓட்டி வந்த கணவரை அடித்து உதைத்து விட்டு, அவரது மனைவியை அவர்கள் தூக்கி சென்றனர். அவர்களிடம் இருந்து தம் மனைவியைக் காப்பாற்ற கணவர் போராடினார். ஆனால் அவரை அந்த கும்பல் அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல், துப்பாக்கியால் சுட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சாய்ந்தார்.

அதன்பிறகு காமவெறிபிடித்த அந்த கும்பல், கணவரின் கண் எதிரிலேயே  துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை கற்பழித்தனர். ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணை 4 பேரும் சீரழித்தனர். காமவெறி அடங்கியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர் அந்த வழியாக வந்தவர்கள், உயிரக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் இருவரையும் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த உஸ்மான், இமாமுதீன், ரஷீத் மற்றும் ரியாசுப் ஆகிய 4 பேர் தான் அந்த காமகொடூரன்கள் என்பது தெரியவந்துள்ளன. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.